Uncategorized

நடிகர் அஜித் நிவாரண நிதிக்கு 2.5 கோடி அளித்ததாக தவறான செய்தி.

வெளியிடப்பட்ட செய்தி:

கொரோனா நிவாரணத்திற்காககாக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.2.5 கோடி வழங்கியுள்ளார் நடிகர் அஜித் குமார்

என்று “தமிழக அரசு செய்திக்குறிப்பு முதல்  முன்னணி செய்தி ஊடகங்கள் வரை”செய்தி வெளியிட்டு இருந்தது.

 

உண்மைத்தன்மை : தவறானது


சைபர் பரிசிலனை குழுவின் விளக்கம்.

தமிழகத்தின் கொரோனா நிவாரண பணிகளுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதி பிரிவிற்கு தங்களால் முடிந்த நிதி வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, பொதுமக்கள், திரைபிரபலங்கள் என பலரும் நிவாரண நிதி அளித்து வருகின்றனர் இந்த நிலையில் நடிகர் அஜீத் குமார் வழங்கிய 25 லட்சம் ரூபாயை நடிகர் அஜித் குமார் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.2.5 கோடி வழங்கி உள்ளதாக முன்னணி செய்தி ஊடகங்களில் பிரேக்கிங் நியூஸ் வெளியாகியது.


இந்த நிலையில் நடிகர் அஜித் குமாரின் மேலாளர் சுரேஷ் சந்த்ரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழக அரசின் செய்தி வெளியீட்டை பகிர்ந்து  திரைப்பட நடிகர் திரு.அஜித் குமார் அவர்கள், கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு RTGS மூலமாக 25 லட்சம் ரூபாய் வழங்கினார் எனக் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டில், கொரோனா நிவாரண பணிகளுக்காக பிஎம் கேர்-க்கு 1.25 கோடியும், தமிழகத்தின் முதல்வர் நிவாரண பிரிவுக்கு 50 லட்சமும், FEFSI-க்கு 25 லட்சமும் நடிகர் அஜித் குமார் அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *